2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹட்டனில் பதற்றம்: கொழும்பு வீதி மூடப்பட்டது

Freelancer   / 2022 ஜூன் 25 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஞ்சித் ராஜபக்ஷ)

ஹட்டனில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதுடன், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மறித்துள்ளனர்.

கடந்த (09) முதல் தமக்கு மண்ணெண்ணெய் கையிருப்பு கிடைக்கவில்லை எனவும், தினமும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு திரும்புவதாகவும் ஹட்டன் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தை மாற்றுவதற்கு ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .