2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அம்பாறை புடவைக்கடையில் தீப்பிடிப்பு

Freelancer   / 2023 மார்ச் 23 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள  தம்பிலுவில் பிரதான வீதியிலுள்ள புடவைக் கடையொன்று, இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடையை வழமை போன்று நேற்றிரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில், சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பற்றி எரிவதை அருகிலுள்ள பொதுமக்கள் அவதானித்து, பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, தீயணைக்கும் படை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

தீயால் மேல் மாடியை கொண்ட கடைத் தொகுதி முற்றாக ஏரிந்துள்ளதுடன், சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .