2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு

Freelancer   / 2023 மார்ச் 31 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முயற்சியால், சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட செந்நெல் கிராம ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த காணி உறுதிப்பத்திரத்தை கையேற்கும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (29) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் ரிபாஸ், செந்நெல் கிராமம் ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஏ.எப். அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .