2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிக விலைக்கு டீசல் விற்றவர் சிக்கினார்

R.Maheshwary   / 2022 ஜூன் 28 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெமேரியா பகுதியில் வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்றில், அதிக விலைக்கு டீசலை விற்றவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸாருக்கு   கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, 40 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரிடமிருந்து 60 லீற்றர் டீசலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

சந்தேகநபரை 30ஆம்  திகதி பசறை   நீதிமன்றில்  ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X