2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொதி சுமக்கும் இருவருக்கிடையில் மோதல்; ஒருவர் மரணம்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை – அம்பகஸ் பஸ் தரிப்பிடத்துக்கு அருகில், பொதி சுமக்கும் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (1) இரவு இடம்பெற்றுள்ளது.

மது ​போதையில் இருந்து இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறே, கைகலப்பாக மாறி ஒருவர் தாக்கியதில் மற்றயைவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தர் மாத்தளை- சுதுகங்கையைச் சேர்ந்த 37 வயதான தினேஸ் குமார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தாக்குதலை மேற்கொண்ட மற்றைய நபர் மாத்தளை- விகாரை வீதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது, மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .