2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டொட்டென்ஹாமை வென்றது லிவர்பூல்

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில், றொபேர்ட்டோ பெர்மினோ பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற செளதாம்டனுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி தோற்றது. செளதாம்டன் சார்பாக, ஸ்டூவர்ட் அம்ஸ்ரோங்க், டனி இங்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். லெய்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை டெனிஸ் பிரயெட் பெற்றிருந்தார்.

இந்நிலையில், கிறிஸ்டல் பலஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆர்சனல் முடித்திருந்தது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை பியர்-எம்ரிக் உபமெயாங்க் பெற்றிருந்ததோடு, கிறிஸ்டல் பலஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோர்டான் அயூ பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற பேர்ண்லியுடனான போட்டியை 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக, ஜோர்ஜினியோ, தம்மி ஏப்ரஹாம், கலும் ஹட்சன்-ஒடோய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற நோர்விச் சிற்றியுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் இரண்டு கோல்களையும், அந்தோனி மார்ஷியல், மேஸன் கிறீன்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில், இஷல்ஸன் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .