Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டு, சுமார் 174 நாள்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன், கடந்த 14ஆம் திகதி இஷாலினியின் வழக்கிலும் பிணை வழங்கப்பட்ட நிலையில் இரு வழக்கிலுமிருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நீண்ட நாள்களுக்கு பின் புத்தளத்துக்கு விஜயம் செய்த ரிஷாட் எம்.பிக்கு, அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் வரவேற்பளித்தனர்.
இதன்போது, ரிஷாட் பதியுதீனின் புத்தளம் இல்லத்துக்கு வருகை தந்த குருணாகல் மகாநாயக தேரர் ரிஷாட் எம்.பியின் நலன் குறித்து விசாரித்ததுடன், அவருக்கு ஆசியும் வழங்கிச் சென்றார்.
(படங்கள் - நூருல் ஹுதா உமர்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago
8 hours ago