2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பனை கைத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர

புத்தளம் மாவட்டத்தில், பனை கைத்தொழிலை  மேம்படுத்தும் வகையில், புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் பனை மரங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளின் ஊடாக, சந்தையில் பனையிலான கைவினைப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை  எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

‘பிளாஸ்ரிக் பாவனையைக் குறைப்பதால், சிறந்த சூழலைக் கட்டியெழுப்பலாம்’ என்ற தொனிப்பொருளில் பனை கைத்தொழிலை விருத்தி செய்வதே, தனது நோக்கமாகுமென, இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X