2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெள்ளவத்தையில் புதுக்கொரோனா 58 பேர் சிக்கினர்

Editorial   / 2021 ஜூன் 24 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டிய மற்றும் கொம்பத்தெரு ஆகிய பிரதேசங்களிலேயே புதிய வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தையில் 58 பேரும், கொம்பத்தெருவில் 23 பேரும், நாரஹேன்பிட்டியவில் 21 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்றுகாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 318 பேர் இனங்காணப்பட்டனர்.

பம்பலப்பிட்டிய-13 பேர்

மட்டக்குளிய – 36 பேர்

அவிசாவளை- 39 பேர்.

தெமட்டகொட -12 பேர்

கிராண்ட்பாஸ்-11 பேர்

இந்நிலையில், இன்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த, 24 மணிநேரத்தில், நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,196 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பிய இலங்கைப் பிரஜைகள் 18 ​பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X