2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டயலொக் ஆசிஆட்டா களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு நன்கொடை

S.Sekar   / 2021 செப்டெம்பர் 10 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொற்றுநோயைத் தணிப்பதற்கான தேசிய முயற்சிகளை ஆதரிக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு 47L திறன் கொண்ட 50 அவசர மருத்துவ தர ஒட்சிசன் சிலிண்டர்களை களுத்துறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் (RDHS) நன்கொடையாக வழங்கியது.

இந்த முயற்சியின் மூலம், கொவிட்-19 க்கு சிகிச்சையளிக்கப்படும் 7 வைத்தியசாலைளுக்கு அதாவது பாணந்துறை ஆதார வைத்தியசாலை, ஹொரண ஆதார வைத்தியசாலை, பிம்புர ஆதார வைத்தியசாலை, பண்டாரகம மாவட்ட வைத்தியசாலை, மத்துகம மாவட்ட வைத்தியசாலை, இங்கிரிய பிரதேச வைத்தியசாலை மற்றும் ஹல்தோட பிரதேச வைத்தியசாலைகளுக்கு அவசரமாக தேவைப்படும் மருத்துவ தர ஒட்சிசன் தேவைகளை இது நிவர்த்தி செய்கின்றது. சுகாதார அமைச்சால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 வைத்தியசாலைகளில் அவசரமாக தேவைப்படும் முக்கியமான பராமரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சமீபத்திய உறுதிமொழிக்கு அமைய தொற்றுநோய்களின் போது தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்காக, டயலொக்கின் இதே போன்ற பல திட்டங்களைப் பின்பற்றி இந்த நன்கொடையானது வழங்கப்பட்டுள்ளது.

களுத்துறை  மாவட்ட, RDHS வைத்தியர் உதயா எல். ரத்நாயக்க, கருத்து தெரிவிக்கையில், தற்போது களுத்துறை - RDHS - இன் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 1,100 க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகள் பராமரிக்கப்படுகின்றார்கள். இந்த மருத்துவமனைகளில் சில மட்டுமே பின்தங்கிய சமூகங்களால் அணுகக்கூடிய சுகாதார சேவைகளின் ஒரே ஆதாரமாகும், மேலும் செயற்கை ஒட்சிசன் தேவையுடைய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நோயாளிகளின் ஒட்சிசன் தேவையை பூர்த்தி செய்வது உயிர்களைக் காப்பாற்றுவதில் ஒரு முக்கியமான காரணியாக மாறியுள்ள நிலையில் மேலும் இந்த சவாலான காலகட்டத்தில் அவசரமாகத் தேவைப்படும் இந்த ஒட்சிசன் சிலிண்டர்களை நன்கொடையாக வழங்கியதற்காக நாங்கள் டயலொக் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த ஒட்சிசன் சிலிண்டர்கள் அவசியமாக தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க RDHS தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .