2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இராணுவத்தினரின் உதவியுடன் மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

Niroshini   / 2021 ஜூன் 20 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கண்டாவளை, கனகராயன் ஆறு, ஊரியான் ஆகிய பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகள்,   இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊரியான் கிராம அலுவலர் பிரிவு, முரசுமோட்டை கிராம அலுவலர் பிரிவு, கண்டாவளை கிராம அலுவலர் பிரிவு ஆகிய பகுதிகளிலும் கனகராயன் ஆற்றுப் படுகை மற்றும் அதனை அண்டிய வயல் நிலங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல்  அகழ்வு இடம்பெற்று வந்தது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், இராணுவத்தினரின் உதவி பெறப்பட்டு, மணல் அகழ்வுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .