2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காத்திருப்பு

Editorial   / 2018 மார்ச் 21 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரைந்து வருடங்களாய்

என் அண்ணனின் வரவினை

எதிர்பார்த்தபடி என் குடும்பம்

கதறித்துடிக்கிறதே இறைவா!

 

காணாமல் ஆக்கப்பட்டானா?

கல்லறைக்குள் புதைக்கப்பட்டானா?

சிறைக்குள் தவிக்கின்றானா?

சிதைந்து சின்னாப்பின்னமாகினானா?

 

உறுதியாய் ஏதும் முடியவி​ல்லை!

உண்மையான தகவல் ஏதும்,

இன்றுவரை கிடைக்கவி​ல்லை!

போதும் இறைவா நீ தந்த வேதனை!

 

தயவு செய்து ஒருமுறையேனும் என்,

அண்ணனின் மதிவதனம் தனைக்

காணுகின்ற வாய்ப்பை கொடு இறைவா!

அப்போது தான் என் குடும்பம்,

சிரிக்கும் ஒலி கேட்கும்!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .