2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தடுப்பூசி பெறாதவர்களுக்கு பிசிஆர்

Niroshini   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - நெடுங்கேணி பகுதியில், இன்றையதினம் (29), தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தலைமையில், வவுனியா சுகாதார வைத்திய பணிமனையினர், நெடுங்கேணி பொலிஸாருடன் இணைந்து நெடுங்கேணி நகரில், மக்களின் தடுப்பூசி செலுத்திய அட்டைகளை பரிசோதனை செய்துள்ளார்கள்.

குறித்த தரப்பினரின் பரிசோதனை நடவடிக்கையில்  கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் கோவிட் - 19 நோய்க்கான ஆபத்தை கூடுதலாக கொண்டிருப்பவர்கள்  என அடையாளப்படுத்தி அவர்களுக்கும், நெடுங்கேணி நகர வர்த்தக நிலைய ஊழியர்களுக்கும் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .