2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாராய் ஆவது?

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லா நினைவுகளையும்
தூக்கியெறிந்துவிட்டு  
நிதானமாக யோசிக்கிறேன்  
பூச்சியத்தில் தொடங்கி  
பூச்சியத்தில் முடியும்
வாழ்க்கை  
பிரச்சினைகளுடன்
வாழ்வதற்கான
போராட்டம்  
தோற்றுப்போன
மனிதர்களுக்கு மத்தியிலும்  
நாளைகள் பற்றி
யோசிக்காத  
சிந்தனைச் சூனியங்களுக்கு
மத்தியிலும்  
தொடரும் தேடல்
பிணங்களாக  
காய்க்கும் வரைக்
கணக்கிலெடுக்கப்படாத
மரங்கள்  
காய்த்தோய்ந்த பின்
கவனிக்கப்படாத மரங்கள்  
நன்றிகெட்ட
உள்ளங்களுக்கு மத்தியில்
பயணம்  
துரதிர்ஷ்டம்  
அவ நம்பிக்கையால்
கொன்று  
கேலிகளால் தோற்கடித்து  
ஆட்டம் காணச் செய்ய  
ஆயிரமாயிரம் திட்டங்கள்  
எதைவிடுவது? எதைச்
செய்வது?  
வேகத்தின்
மீதான தடைகள்.  
வாழ்க்கை தேர்ந்த
ஆடுகளம்  
ஆடித்தான் வெல்ல
முடியும்  
நியதிப்படி கடினமும்
இலகும்  
நானும் என் பாடுமெனப்  
பெறுமானமற்றுப்  
பதுங்கிய மனிதர்களில்
ஒருவனாய்  
மாறவேண்டுமாய்
நிர்ப்பந்திக்கும் காலம்  
யாராகமாறுவது?  
எல்லோரையும் வஞ்சிக்கும்
சுயநலமி!  
கண்ணீரைக்
கவணியாகயவன்  
மனிதமுள்ள மனிதன்  
ஒரு முடிவை நோக்கி  
வாழ்வு  நகர்ந்து
கொண்டேயிருக்கிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X