2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஏ - 9 வீதி விபத்தில் இராணுவச் சிப்பாய் பலி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிநொச்சியில் ஏ  - 9  வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவச் சிப்பாயொருவர் பலியாகியுள்ளார்.

நேற்று புதன்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து மணல் மற்றும் கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனமும்; குறித்த இராணுவச் சிப்பாயின் வாகனமும் நேருக்குநேர் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .