2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அங்கு குத்திக்கொள்ளாது இங்கு குத்திக்கொண்டார்

Editorial   / 2021 ஜூலை 14 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.வி.பியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, கொவிட்-19 தடுப்பூசியை, இன்று (14) ஏற்றிக்கொண்டார்.

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாந்தி மன்ற விஹாரையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்திலேயே அவர், தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற பணியாட்தொகுதியினருக்கும், பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்தும் இராணுவ வைத்தியசாலையில் வைத்தும் கொரோனா தடுப்பூசிகள் கடந்தகாலங்களில் ஏற்றப்பட்டன. எனினும் அவ்விரு இடங்களிலும், அனுரகுமார திஸாநாயக்க, தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .