2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்திய இராணுவத் தளபதியாக பிபின் றாவத்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிர்ச்சிகரமான நகர்வாக, இந்தியாவின் அடுத்த இராணுவத் தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் பிபின் றாவத்தை, இந்திய அரசாங்கம் நேற்று (17) அறிவித்துள்ளது.

இந்த நியமனத்தின் மூலம், தகுதி வாய்ந்த சிரேஷ்ட அதிகாரியே தளபதியாக நியமிக்கப்படும் பாரம்பரியம் மீறப்பட்டுள்ளது. வழமையின் பிரகாரம், கிழக்கு கட்டளையகத்தின் கட்டளைக்குப் பொறுப்பான அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பிரவீன் பக்ஷியே தளபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .