2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கட்டுரைத் தொகுப்பு நூல் அறிமுகம்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலாளர் தராகி சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில், ஊடகவியலாளர் சண் தவராஜாவின் தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் மட்டக்களப்பில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

2005ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரட்ணம் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு. மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் 28ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் சண் தவராஜாவின் நூல் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

ஊடகவியலாளர் சண் தவராஜாவின் “தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு” என்ற கட்டுரைத் தொகுப்பு நூல், கடந்த 22ஆம் திகதி சுவிஸ் நாட்டில் நூலாசிரியர் சண் தவராஜாவினால் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நூல், சிவராம் ஞாபகார்த்தமாக, இலங்கை வாசகர்களுக்காக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தால் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், யாழ். ஊடக அமையம் மற்றும் ஊடக அமைப்புகளின் இணைவுடன் நடைபெறும் இந்த வருட ஞாபகார்த்த நிகழ்வுகள், “இலங்கை அரசியலில் மக்கள் மயப்பட வேண்டிய ஊடக மனோநிலை” என்ற தொனிப்பொருளில் நடைபெறுகிறது.

சிவராம் நிகழ்வையொட்டியதாக ஊடகம் - மக்கள் - அரசியல் என்ற தலைப்பில் அன்றைய தினம் காலை கல்லடியிலுள்ள ஊடகக் கற்கைகளுக்கான நிறுவனமான வொயிஸ் ஒப் மீடியாவில் ஊடகத்துறையில் தற்போது பணியாற்றுபவர்கள், புதிதாகப் பிரவேசிக்கவுள்ள புதியவர்களுக்குமான ஊடகப்பயிற்சிப்பட்டறையொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள தராகி சிவராமின் நினைவு நிகழ்வில், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அ.நிக்சன் உட்பட சிங்கள தமிழ் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும், சிவராமின் நெருங்கிய நண்பர்களும் உரையாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வில், வடக்கு, கிழக்கு, தெற்கு, கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சிவராமுடன் இணைந்து பணியாற்றியவர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X