2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. கல்வி வலயம் சம்பியன்

Menaka Mookandi   / 2011 மே 30 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்,சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வலயங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயம் 874 புள்ளிகளைப்பெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு வலயங்கள் கலந்துகொண்டன.

இதன்போது 713 புள்ளிகளைப்பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும், 463 புள்ளிகளைப்பெற்று கல்குடா கல்வி வயலம் மூன்றாம் இடத்தினையும் 404 புள்ளிகளைப்பெற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் நான்காம் இடத்தினையும் பெற்றது.

மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சிவநாதன் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மூன்று ஏனைய மூன்று வலயங்களின் வலயக்கல்விப்பாளர்களாகிய ஏ.எம்.ஈ.போல், யூ.எல்எம்.ஜெயனுதீன், திருமதி எஸ்.சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X