2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எல்லேப் போட்டியில் யாழ். மாவட்ட அணிக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 06 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையே நடத்தப்பட்ட பெண்களுக்கான எல்லேப் போட்டியில் யாழ். மாவட்ட அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற இறுதிப் போட்டியில முல்லைத்தீவு மாவட்ட அணியும் யாழ். மாவட்ட அணியும் மோதிக்கொண்டன.

முதலில் விளையாடிய யாழ். மாவட்ட அணி 07 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைவரும் ஆட்டம் இழந்தனர்.  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முல்லைத்தீவு மாவட்ட அணி 04 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைவரும் ஆட்டம்  இழந்தனர்.

இரண்டாவது இனிங்சில் விளையாடிய யாழ். மாவட்ட அணி 04 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைவரும் ஆட்டம் இழந்தனர்.
08 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு விளையாடிய முல்லைத்தீவு மாவட்ட அணி அனைவரும் ஆட்டம் இழந்து 02 ஓட்டங்களைப் பெற்றார்கள்.

ஆட்ட நிறைவில் யாழ். மாவட்ட அணி 11க்கு 06 ஓட்டகள் என்ற புள்ளிகள் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட அணியை வென்று வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X