2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண கால்பந்தாட்டத்தில் மன்னார் மாவட்ட அணிகள் ஆதிக்கம்

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன், நவரட்ணராசா


வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முதலாம், இரண்டாம் கட்டப் போட்டிகள் முடிவுற்று, மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் 15, 17, 19 வயது இருபாலாருக்குமான கால்பந்தாட்டப் போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

17 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் மன்னார் சென்.சேவியர் அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயமும், மூன்றாமிடத்தினை இளவாளை சென்.ஹென்றிஸ் அணி பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு பெண்களுக்கான போட்டியில் முதலிடத்தினை மாதகல் சென்.ஜோசப் வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தினை கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயமும், மூன்றாமிடத்தினை கிளிநொச்சி சிவநகர் ஜி.ரி.எம்.எஸ் உம் பெற்றுகொண்டன.

இன்று வெள்ளிக்கிழமை எஞ்சிய பிரிவு அணிகளுக்கிடையிலான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X