2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விபுலானந்த விளையாட்டுக்கழக மின்னொளிக் கரப்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 14 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

வவுணதீவு விபுலானந்த விளையாட்டுக் கழகத்தின் 29ஆவது நிறைவை முன்னிட்டு  நேற்று சனிக்கிழமை இரவு மின்னொளிக் கரப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

கழகத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற மின்னொளிக் கரப்பந்தாட்டப் போட்டியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் மா.யோகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தின் சகல பாகங்களிலுமிருந்து கரப்பந்தாட்ட அணிகள் கலந்துகொண்டன.

இதன்போது கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X