2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்தின் சமர் கால்பந்தாட்டம் நேற்று முதல் ஆரம்பம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.சுரேன்

ஊரெழு றோயல் விளையாட்டு கழகம் யாழ்.மாவட்டத்தின் மூன்று கால்ப்பந்தாட்ட லீக்கிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் 'யாழ்ப்பாணத்தின் சமர்' என்னும் அணிக்கு 7 பேர் கொண்ட கால்;பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நேற்று திங்கட்கிழமை முதல் உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

மூன்று லீக்குகளைச் சேர்ந்த 64 கால்ப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றும் இச்சுற்றுப்போட்டி விலகல் முறையில் நடைபெறுகின்றது.

நேற்று ஆரம்பமான முதல் போட்டியில் அரியாலை ஐக்கிய ஏ அணியினை எதிர்த்து அராலி சில்வெஸ்டர் அணி மோதியது. இப்போட்டியில் அரியாலை ஐக்கிய ஏ அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது போட்டியில் ஞானமுருகன் ஏ அணியினை எதிர்த்து அரியாலை ஜக்கிய பி அணி மோதியது. இப்போட்டியில் ஞானமுருகன் ஏ அணி 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X