2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பஸ் பயணிகளுக்கு புதிய யோசனை

Nirosh   / 2021 ஜூலை 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுமையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் பஸ்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டுமென யோசனை ஒன்றை உருவாக்க வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

முழுமையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு அடையாள அட்டை ஒன்றை விரைவில் வழங்குவதனூடாக இதனை செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் பணத்தை செலுத்தி விரைவாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சுகாதாரத் தரப்பினரால் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டால் நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்களை மீள ஆரம்பிக்க வேண்டுமெனவும், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் இதனூடாகப் பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X