2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

இந்தியாவிலிருந்து மற்றுமொரு விமானம் வந்திறங்கியது

Editorial   / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம், செவ்வாய்க்கிழமை (09)  அன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம் இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான C-17 வகையைச் சேர்ந்தது, இந்தியாவின் படங்காஸிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை  இந்த விமானம் வந்தடைந்தது.

இந்த விமானம் 61 மெட்ரிக் தொன் எடையும், 110 அடி நீளமுள்ள பெய்லி பாலமும், 600 கிலோகிராம் எடையுள்ள மருந்துப் பொருட்களையும் சுமந்து வந்துள்ளது.

இந்த நிகழ்வின் போது இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையத்தின் அதிகாரிகள் குழு ஆகியவை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X