2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

Editorial   / 2020 மே 11 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (11) அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (10) அறிவித்தது.

இதேவேளை, நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தினமும் இரவு 8.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மக்களை வாழ்க்கை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் திட்டமிட்டவாறு இன்று (11) திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X