Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
விமானம் மூலம் பெங்களூருக்கு சென்ற ஜனாதிபதி, பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர், திருப்பதி வழியாக இரவு 8.30 மணிக்கு திருமலைக்கு சென்றுள்ளார்.
ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி, திருப்பதி சுகுணா எம்.எல்.ஏ. மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் வரவேற்பளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 2.15 மணிக்கு கோவிலுக்கு சென்ற ஜனாதிபதி, அதிகாலை 3 மணிக்கு நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago