2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Editorial   / 2020 மே 09 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென் மாகாணங்களிலும் களுத்துறை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அத்துடன், மேல் மற்றும் தென் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X