2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

Editorial   / 2020 மே 11 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (11) மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும்; காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களின்  சில பகுதிகளிலும்  100 மில்லி மீற்றருக்கு அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென், மேல் மற்றும் கிழக்கு கடற் பிராந்தியங்களில் காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் தெரவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் இதனால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X