2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பல பகுதிகளில் நீர்வெட்டு

Editorial   / 2020 மே 12 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (12) 10 மணித்தியால நீர்வெட்டு அமல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை-கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்  பணிகள் காரணமாக, மு.ப 8.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணிவரை நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, நீர் வழங்கல்  சபையின் களுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் வாத்துவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, மொரன்துடுவ, கட்டுக்குருந்த, நாகொட, தொடங்கொட, பிலமினாவத்த, தர்காநகர், பெந்தொட்ட ஆகிய பகுதிகளுக்கே, நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X