2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Editorial   / 2020 மே 05 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகள் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மீள திறக்கப்படும் என வெளியான தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என ஊடகங்களில் செய்தி வெளியாகியதாகவும், அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அமைச்சு கூறியுள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அறிவிக்கப்படும் என, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X