2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வானிலை குறித்த சிவப்பு எச்சரிக்கை

J.A. George   / 2025 ஜூலை 17 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்தப்  பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.5 - 3.5 மீட்டர் உயரம் உயர வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புத்தளம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையும் வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பில் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X