2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

வெளியேற்றப்பட்ட லிவர்பூல், டொட்டென்ஹாம்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.

தமது மைதானத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான விலகல் முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றுப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து லிவர்பூல் வெளியேறியது.

பலஸ் சார்பாக இஸ்மைலா சார் இரண்டு கோல்களையும், யெரெமி பினோ ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட் தோல்வியடைந்திருந்தது. நியூகாசில் சார்பாக பேபியன் ஸ்கார், நிக் வொல்டெமடே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்சனல் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X