Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 11 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.எச்.ஏ. ஹுஸைன்
தேங்காய்கள் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியவர், பிடி சறுகியதால் தவறி விழுந்து மரணமடைந்துள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், சதாம்ஹுஸைன் கிராமத்தில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஆதம்லெப்பை லாபீர் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர், கூலிக்கு தேங்காய் பறிப்பதற்காக உயரமான தென்னை மரத்தில் ஏறியபோது மர உச்சியிலிருந்து பிடி சறுக்கி கீழே விழுந்துள்ளார்.
இவரின் சத்தம் கேட்டு உதவிக்கு விரைந்தவர்கள், உடனடியாக அவசர அம்பியூலன்ஸ் சேவை 1990க்கு அழைப்பித்து, முதலுதவிச் சிகிச்சை அளித்து பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி, அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
14 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
2 hours ago