Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் இன்று (31) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில், நேற்று (30) இரவு அத்துமீறி நுழைந்து, நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்கள் பயணம் செய்த 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
குறித்த மீனவர்கள் கடற்படையின் விசாரணையின் பின்னர் யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேவேளை, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக, இலங்கை கடற்படையினாரல் இந்த வருடம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 80 இந்திய மீனவர்களில், 76 மீனவர்களை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபார் திணைக்களத்தில் இருந்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
57 minute ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago
1 hours ago
9 hours ago