Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 25 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப். ஜெஸீரா)
குவைத் நாட்டின் சனாபுல் ஹைர் நிறுவனத்தின் அனுசரணையில் புத்தளம் தில்லையடி ரத்மல்யாயப் பகுதியிலுள்ள 200 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் வைபவம் இன்று மாலை நடைபெற்றது.
சனாபுல் ஹைர் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் யாஸிர் சஹீத் நஸீப் மற்றும் அவரது பாரியார் சனா பூ குரைஷ் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை மக்களிடம் கையளித்தனர்.
இதன்போது குவைத் நாட்டின் உதவியுடன் புத்தளம் மதுரங்குளியில் இயங்கி வரும் மேர்சி கல்வி நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் நஸீர் அபூ ஜூஹைத் மற்றும் மேர்சி கல்வி நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .