2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஹிங்குரனங்கொடையில் பஸ் விபத்து: 30பேர் காயம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பொலொன்னறுவை, ஹிங்குரனங்கொடை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பொலொன்னறுவையிலிருந்து ஹிங்குரங்கொடை வரை சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று ஹத்தமுனை பாலத்திற்கருகாமையில் பாதையை விட்டு விலகி 15 அடி பள்ளத்தில் விழுந்ததினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹிங்குரக்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொலொன்னறுவை மற்றும் ஹிங்குரங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிங்குறக்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X