2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 14 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்குத் தேவையான பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்கா தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான மக்களுடைய வீடுகள், வயல் நிலங்கள், சேனைப் பயிர்ச் செய்கைகள் என்பன சேதமாகியிருந்தன.

எனவே வெள்ளம் காரணமாக சேதமுற்றுள்ள சகல வீடுகள் மற்றும் உடைப்பெடுத்த சகல குளங்களைப் புனர்நிர்மானம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X