2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இளைஞர் காயம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் தில்லையடி ரத்மல்யாயப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தில்லையடி ரத்மல்யாயப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை  காலை 10 மணியளவில்  முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இளைஞனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  புத்தளம் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவத்தின்போது முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X