2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 மே 09 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்,ஹிஜாஸ்)

புத்த பெருமான் ஞானம் பெற்று 2600 ஆண்டுகள்  பூர்த்தியை முன்னிட்டு புத்தளம் பொலிஸ் தொகுதியில் இரத்ததான நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

புத்தளம் பொலிஸ் தொகுதி அத்தியட்சகர் எச்.எம்.தர்மசேனவின் தலைமையில் புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்ரத்த மண்டபத்தில் இந்த இரத்ததான நிகழ்வு   நடைபெற்றது.

புத்தளம் பொலிஸ் தொகுதிக்குட்பட்ட  9  பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த சகல தரத்திலும் கடமை புரியும் பொலிஸார் இந்த இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புத்தளம் வைத்தியசாலை வைத்திய குழுவினர் இதற்கு  ஒத்துழைப்பு வழங்கினர். படப்பிடிப்பு:-அப்துல்லாஹ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X