2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் 4ஆம் மாடிக்கு அழைப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர். லெம்பேட் இரண்டாவது தடவையாக மீண்டும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரனைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக எஸ்.ஆர். லெம்பேட் தெரிவிக்கையில்,

 மன்னார் மூர்வீதியில் உள்ள என்னுடைய வீட்டிற்கு மன்னார் பொலிஸாரினூடாக நேற்று வெள்ளிக்கிழமை(11) அழைப்பாணைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

326-14 இலக்கம் கொண்ட குறித்த கடிதத்தில் ஊடகவியலாளரான எஸ்.ஆர்.லெம்பேட் என்பவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு (ரி.ஐ.டி) காரியாலயத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை(14) காலை 10.00 மணிக்கு வருகை தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ஏன்? எதற்காக விசாரனைகளுக்காக அழைக்கப்படுகின்றேன் என்ற விடையம் இது வரை தெரியவில்லை.
இந் நிலையில் இதே ஊடகவியலாளர் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 09ஆம் திகதி(09-12-2013) அன்று முதல் தடவையாக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரின்  விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது இணையத்தில் இருந்து வெளி வந்துள்ள சில செய்திகள் தொடர்பாகவும், குறிப்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாகவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடர்புகள் குறித்தும்  விசாரணைகளை மேற்கொண்டதாக ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X