2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 20 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 07 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்  உத்தரவிட்டார்.

இவர்களை மன்னார் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

04 படகுகளுடன் இம்மீனவர்கள் 20 பேரையும் சனிக்கிழமை (05) இரவு கைதுசெய்த கடற்படையினர்,  ஞாயிற்றுக்கிழமை (07) மாலை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், இவர்களிடம் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

இதேவேளை, கடந்த 28ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 17 பேரும்  எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X