2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 22 பேர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 20 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தலைமன்னார் கடற்பரப்பில் 05 படகுகளுடன் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை  இரவு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரையும்  நேற்று வியாழக்கிழமை மாலை  மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன், இவர்களின் படகுகளிலிருந்த வலைத்தொகுதிகளையும்;  தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் வி.எஸ்.மெரண்டா தெரிவித்தார்;.  

இம்மீனவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்த பின்னர்   மன்னார் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X