2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 22 பேருக்கும் விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 20 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  மன்னார் பதில் நீதவான்,  இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

அத்துடன், இம்மீனவர்களின் படகுகள் மற்றும் வலைத்தொகுதிகளை பாதுகாப்பதற்கு  உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மன்னார் நீதிமன்றத்தில் இம்மீனவர்களை  இன்று வெள்ளிக்கிழமை  ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.

05 படகுகளுடன் வந்த இம்மீனவர்களை நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு கைதுசெய்த  கடற்படையினர், வலைத்தொகுதிகளுடன் இவர்களை   மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்  நேற்று வியாழக்கிழமை மாலை ஒப்படைத்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X