2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 37 பேர் விடுதலை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 11 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 37 பேரையும்  மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்து விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மேற்படி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மேற்படி மீனவர்களை  ஆஜர்படுத்தியபோதே மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்  இவர்களை விடுதலை செய்தார்.

இவர்கள் தற்போது இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி 03 படகுகளுடன்  17 இந்திய மீனவர்களும் கடந்த 05ஆம் திகதி 4 படகுகளுடன்  20 இந்திய மீனவர்களும்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X