2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மனைவியை கொன்ற கணவன் தற்கொலை

Menaka Mookandi   / 2014 மே 11 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, வள்ளிபுனம், கரித்தாஸ் கியுடெக் வீட்டத்திட்டப் பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஜ் (வயது 30) என்பவரும், அவரது மனைவியான அருள்ராஜ் செல்வகுமாரி (வயது 28) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து சென்ற கணவன், வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் இருப்பதுடன், இவ்விடயம் தொடர்பாக அவர்களின் 3 வயதுப் பிள்ளை அயலவர்களுக்குத் தெரிவித்ததினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சடலங்களையும் நீதவானின் உத்தரவிற்கமைய மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X