2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அஞ்சலி செலுத்த எமக்கு தடை ஏன்: டெனிஸ்வரன் கேள்வி

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த இறுதி யுத்தத்தில் மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கென்ன தடை என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று(17) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட எமது தமிழ் மக்கள், போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தவோ அல்லது துக்கம் அனுஷ்;டிக்கவோ கூடாது என அரசாங்கம் கட்டளையிட்டுள்ளதும், அவ்வாறு ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொண்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளமையும் மீண்டும் தமிழ் மக்களின் உரிமைகள் மீது அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடும் நிகழ்வாகவே அமைகின்றது.

இலங்கை அரசியல் யாப்பில் இல்லாத ஒரு புதிய சட்டமே இறந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்பதாகும்.
இவைகளையும் சர்வதேசம் கண்கூடாக கண்டு கொள்ளட்டும். அத்தோடு நடு நிலைமை வகித்த இந்தியாவும் இனியாவது விழிப்படையட்டும்.

மக்கள் பொது இடங்களில் அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும், மக்கள் மனமுவந்து தமது வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக்கொள்வதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X