2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேரினை சுற்றி வேலியமைத்ததாக நபர் மீது முறைப்பாடு

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோயில் தேரினை சுற்றி வேலி அமைத்துள்ளதாக ஆலய  பரிபாலன சபை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் நகரில் அமைந்து செல்வமுத்து மாரியம்மன் ஆலயம் சுமார் 120 வருட பழமை வாய்ந்தது. 

இக்கோயில் அமைந்துள்ள இடமும், அதனைச் சூழவுள்ள நிலப்பரப்பும் தனக்கு சொந்தமானதென  உரிமை கோரிய தனி நபர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை(13)  கோயிலின் தேர் நிறுத்தி வைக்கப்படும் காணியினை சுற்றி முட்கம்பிகளினால் சுற்று வேலியொன்றை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபையினர், தேரைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றுமாறு குறித்த நபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அவர் அதற்கு இனங்க மறுத்துள்ளார்.

இந்த நிலையில் பரிபாலன சபையினர் இவ்விடயம் தொடர்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து சமய கலாசார திணைக்களத்தில் குறித்த முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனது வருடாந்த கொடியேற்றமும் தேர்த்திருவிழாவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில்  நடைபெறவுள்ளது.

வருடாந்த திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் ஆலய பரிபாலன சபையினராலும் பொதுமக்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் கோயில் உற்சவம் இடம்பெறும் தினத்தில் தேர் இழுக்கும் வைபவமும் இடம்பெறவுள்ள நிலையில் அமைக்கப்பட்டுள்ள வேலி காரணமாக தேரினை எங்கும் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உற்சவத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள தீ மிதிப்பு சடங்கும் நடத்த முடியாத நிலையில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் தீமிதிப்பு நிகழும் இடத்திலும்; வேலி அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X