2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிமுனை கடல்நீர் செல்வதை தடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 24 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பள்ளிமுனை கிழக்கு பகுதியிலுள்ள கிராமங்களினுள் கடல் நீர் உட்;செல்வதை தடுக்கும்  வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் யூ.என்.கெபிட்டா அமைப்பும் மன்னார் நகரசபையும் திங்கட்கிழமை (23) மாலை  கைச்சாத்திட்டுள்ளதாக மன்னார் நகரசபையின் உபதலைவர் செ.ஜேம்ஸ் ஜேசுதாசன் தெரிவித்தார்.

பள்ளிமுனை கிழக்கு பகுதியிலுள்ள 50 வீட்டுத்திட்டம், 49 வீட்டுத்திட்டம்,  41 வீட்டுத்திட்டம் ஆகிய 03  வீட்டுத்திட்ட கிராமங்களினுள்  கடல் நீர் உட்செல்கின்றது. இதனால், இங்குள்ள சுமார் 140 குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதுடன்,  இவர்களுக்கு தற்காலிகமாக இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், மன்னார் நகரசபையானது யூ.என்.கெபிட்டா அமைப்பின் 10 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.  மன்னார் நகரசபையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக  வேலைத்திட்டத்திற்கான வரைபடம் தயாரிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் இவ்வேலைத்திட்டம் நிறைவுறுமெனவும் செ.ஜேம்ஸ் ஜேசுதாசன்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X