2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மணல் கொண்டு சென்றவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 26 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரமொன்றில்  மணல் கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஒருவருக்கு 50,000 ரூபாவை தண்டமாக  கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் விதித்தார்.

அத்துடன், மணலை பறிமுதல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

கிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) மேற்படி நபரை கைதுசெய்த  பூநகரிப் பொலிஸார், மணலுடன்   உழவு இயந்திரத்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X